இந்த சிறப்பு மிக்க பழைமையான திருக்கோவில் 1)வில்லிகுலம், 2)ஆந்தைகுலம், 3)பூந்தைகுலம், 4)காடைகுலம், 5)செல்லன்குலம், 6)கணக்கன்குலம், 7)வண்ணக்கன்குலம், 8)பில்லன்குலம், 9)கண்ணந்தைகுலம் ஆகிய 9 குல காணியாளர்களுக்கு குலதெய்வமாகும். இத்திருக்கோவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிசெய்யப்படாமலும், கும்பாபிஷேகம் செய்யப்படாமலும் இருந்ததால் 2007 ம் ஆண்டு 9 குல பெரியோர்களும் ஒன்றுகூடி இத்திருக்கோவிலை புதிதாக நிர்மானித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கு வள்ளியரச்சல் ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன் கோவில் முதன்மைதாரர்கள் நற்பணிமன்றம் அமைத்தார்கள். இம்மன்றத்தின் தலைவராக திரு.துரை ராமசாமி முன்னாள் அமைச்சர் அவர்களும், உபதலைவராக திரு.பி.சக்திவடிவேல் அவர்களும், துணைதலைவராக திரு.பி.விஜய நடராஜ் அவர்களும், செயலாளராக திரு.எஸ்.கே.மயிலானந்தன் அவர்களும் இணைச்செயலாளராக திரு.எஸ்.டி.சந்திரசேகர் அவர்களும், துணைச்செயலாளராக திரு.எம்.ஜி.பாலன் அவர்களும், திரு.எஸ்.என்.சின்னச்சாமி அவர்களும், பொருளாளராக திரு.கே.பரமசிவம் அவர்களும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக திரு.வி.யோகலிங்கம் அவர்களும், திரு.கே.எஸ்.பாலசந்திரன் அவர்களும், திரு.சி.சிதம்பரசாமி அவர்களும், திரு.பி.சண்முகசுந்தரம் அவர்களும், திரு.பி.சிவசுப்பிரமணியம் அவர்களும், திரு.கே.அருணாசலக்கவுண்டர் அவர்களும், திரு.ஏ.எஸ். ராமமூர்த்தி அவர்களும், திரு.என்.பழனிச்சாமி அவர்களும், திரு.டி.தங்கமுத்து அவர்களும், திரு.கே.சி.பழனிச்சாமி அவர்களும், திரு.என்.கோவிந்தசாமி அவர்களும், திரு.பி.ரத்தினசாமி அவர்களும், திரு.ஏ.அழகியண்ணன் அவர்களும், திரு.எம்.வி.சண்முகராஜ் அவர்களும், திரு.எஸ்.என்.பொன்னுசாமி அவர்களும், திரு.கே.தண்டபாணி அவர்களும், திரு.ஏ.ராஜேந்திரன் அவர்களும், திரு.பி. சண்முகநதி அவர்களும், திரு.ஆர்.மோகன்குமார் அவர்களும், திரு.பி.சோமசுந்தரம் அவர்களும் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு புதிய திருக்கோவில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் திருப்பணி நிறைவு பெற்று திருக்கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

இங்கனம்,
ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன் திருக்கோவில்,
வள்ளியரச்சல்.
மேட்டுப்பாளையம் அஞ்சல்,
காங்கயம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்,
செல் : +91 95 85 111 222
04257 - 254999